Thursday, 3 January 2013

கோல்ட் ETF களில் முதலீட்டின் நிகர சொத்து மதிப்பு ரூ.12000 கோடியை நெருங்குகிறது

பரஸ்பர நிதிகளின் கூட்டணி அமைப்பு AMFI(Association of Mutual Funds of  India) நவம்பர் 30 தேதி வரை மியுச்சுவல் பண்ட் களில் முதலீடு செய்யபட்டுள்ள முதலீட்டின் சொத்து மதிப்பை வெளிட்டுள்ளது.

 அதன் படி கோல்ட்  ETF களில் நவம்பர் 30 தேதி வரை செய்யபட்டுள்ள முதலீடுகளின் நிகர சொத்து மதிப்பு ரூ.11,918 கோடி மதிப்பீடு செய்துள்ளது. இந்த  அதிகபட்ச சொத்து மதிப்பிற்கு காரணம் தங்கத்தின் விலை ஏற்றமும்,முதலீட்டாளர்களின் தொடரும் முதலீட்டின் தேவை அதிகரிப்புமே ஆகும்.


தற்பொழுது 14 மியுச்சல் பண்ட்  நிறுவனங்கள் நிர்வாகிக்கும் 25 வேறுபட்ட கோல்ட் ETF முதலீட்டு திட்டங்ககள் நடைமுறையில் உள்ளது.  தங்கத்தின் விலை கண்காணித்து முதலீட்டை  பன்மடங்காக பெருக்குவதே இந்த திட்டங்களில் நோக்கம்.   

கோல்ட் ETF களின் நிகர சொத்து மதிப்பு  கடந்த செப்டம்பர் மாதத்தில் தான் ரூ.11,000 கோடியை கடந்தது.



கோல்ட் ETF -ன் வளர்ச்சி 



கோல்ட் ETF ன் சாதகங்கள்/நன்மைகள் 

  • திருட்டு பயம் இல்லா பாதுகாப்பு   
  • பத்திரபடுத்தலுக்கான செலவு இல்லாமை 
  • கடந்த 5 வருடகளில் தங்கத்தின் விலை மும்மடங்கு உயர்வு(10 கிராம் விலை ரூ.10,000-ரூ.31,000 )
   முதலீட்டாளர்களின் ஈர்ப்புக்குகான காரணம் ஆகும்.



          கடந்த 5 ஆண்டுகளில் மியுச்சுல் பண்ட்களின் வளர்ச்சி 


Related articles

No comments:

Post a Comment